மன்னார்குடி அருகே திரைப்பட பாணியில் பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் கைது

மன்னார்குடி அருகே திரைப்பட பாணியில் குழி தோண்டி பதுங்கி இருந்த கொள்ளையர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை தோப்புவை சேர்ந்த கண்ணதாசன், நாகர்கோவிலை சேர்ந்த ஆனந்தி மற்றும் இவர்களது கூட்டாளி சதித் குமார் ஆகியோர் மன்னார்குடி பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் கொல்லை சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாக இருந்து வந்தனர்.

இவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மன்னார்குடியை அடுத்த கூப்பாச்சிக் கோட்டை அருகே உள்ள மூங்கில் காட்டில் 6 அடி குழி தோண்டி அந்த பள்ளத்தில் தலைமறைவாக இருந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரவாக்கோட்டை காவல் துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடுவதற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version