சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை – வழிபாட்டிற்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை வழிபாட்டுக்கு சபரிமலை செல்ல 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாட்டில் கலந்து கொள்ள, இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 539 பேர் 10 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள வருகை தருவதால் அவர்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கவும் , முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவும் இணையதளத்தின் வழியாக பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை கேரள காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்மையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு இந்து அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version