காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள ஸ்வஜ்ஜியான் செக்டார் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version