மும்பையில் கார் விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி

மும்பையில் கார் விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேரிட்ட சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அந்தேரியை சேர்ந்த நமீதா சோனல் சந்த், குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். ஒர்லி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதியதில், காரில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டிச்சென்ற சந்த், வேகத்தடையை  கவனிக்காததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version