விருதுநகர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி

விருதுநகர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

சாத்தூரை அடுத்த தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலைக்காகத் தொழிலாளர்களை வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறிச் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த தொழிலாளர்களில் 15 வயதுச் சிறுவன் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version