ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற திருவண்ணாமலை அரசு பேருந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பேரிகாட் மீது மோதி விபத்துக்குள்ளானது, இதில் எந்த காயங்களும் இல்லாத நிலையில், பின்னால் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து, முன்னால் உள்ள பேருந்து மீது மோதாமல் இருக்க உடனடியாக நிறுத்த முயன்றதால் சாலையிலேயே கவிழ்ந்தது. இதற்கிடையே, பயணிகள் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். பேருந்துகளில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version