ஸ்ரீவில்லிப்புத்தூரில் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்து

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குற்றாலத்திற்கு சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் அதிகாலையில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த 3 பேர் குற்றாலத்திற்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் நத்தம்பட்டி பகுதியில் எதிரே வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் மதுரையைச் சேர்ந்த யாஷிப், முகமது பிலால் ஆதிய உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version