இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறி செய்ய முயன்ற மூன்று பேர் கைது

பொன்னேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறி செய்ய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சந்தீப். நகை வியாபாரம் செய்து வரும் இவர் நகை வாங்க சென்னைக்கு பணத்தோடு பேருந்தில் வந்துள்ளார். இதை அறிந்த ஆந்திராவை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது செங்குன்றம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையிலிருந்த போலீசார் ஒருவரை மறிக்க, சுதாரித்த மற்ற இருவர் தப்பிச் சென்று தலைமறைவாகினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பிடிபட்ட மூவரை கைது செய்து விசாரித்ததில், நகை வாங்க வந்த வியாபரியிடம் இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக பின் தொடர்ந்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் அவர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version