உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூவர் காவல்துறையினரால் கைது!!!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூன்று பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தெற்குமலை அடர் வனப்பகுதிக்குள் சிலர் அத்துமீறி நுழைந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 நபர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து உடும்பு வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

பின்னர் மூவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version