பெரம்பூர் அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

சென்னை பெரம்பூர் அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர் துணை கமிஷ்னர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பெரம்பூரை சேர்ந்த கிஷோர். இவர் 2 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில்,  தனது நண்பர்களுடன் ஐசிஎப் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் மதுபோதையிலிருந்த சிலர் இவர்களை கிண்டல் செய்யவே, தகராறு ஏற்பட்டுள்ளது.  அந்த கும்பல்,  காவலர் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளது. காயமடைந்தவர்களை அருகிலிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து காவலர் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஐசிஎப் காவல்துறையினர்,  அருண்குமார், சரண் குமார், ராகேஷ் ஆகிய மூவரை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version