சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 3 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ்குமார் மற்றும் சேஷசாயி ஆகியோர் நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக மூன்று நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வந்த நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ் குமார் மற்றும் சேஷசாயி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் இன்று மாலை தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version