தொழிலதிபருக்கு மிரட்டல்: திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இருந்து, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை விடுவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன் என்பவரை, சட்டவிரோத காவலில் வைத்து, சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட 5 பேர் மீது, திருப்பூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, அன்பழகன் தாக்கல் செய்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அன்பழகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் தரப்பிலான வாதத்தை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version