ஒரே கல்லில் அமைந்த பிரமாண்ட மகா விஷ்ணு சிலை – ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வழிபட்டு செல்கின்றனர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் நிறுத்தி வைக்கபட்டுள்ள 66 அடி நீளம் மகா விஷ்ணு சிலையைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு ஓரே கல்லினால் ஆன பிரமாண்ட விஷ்ணு சிலை கொண்டு செல்லப்படுகிறது. 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட இந்தச் சிலையை கொண்டு செல்லும் வாகனம் தீவனூர் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இன்று ஞாயிற்று கிழமை என்பதாலும், மார்க்கழி முதல் நாள் என்பதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த  ஆயிரக்கணக்கானோர்.விஷ்ணு சிலையை பார்வையிட்டு வழிபட்டுச் செல்கின்றனர்.

Exit mobile version