ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஊழலின் ஒட்டுமொத்த உருவமான திமுகவை, வருகிற சட்டமன்ற தேர்தலில், மக்கள் புறக்கணிப்பார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் சிறப்பு வாக்காளர் முகாமை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக என்று விமர்சித்தார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும், திமுக அணியில் இருப்பவர்களும் வருவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version