முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது .

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குமுளி, தேக்கடி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆயிரத்து 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 128 புள்ளி 60 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version