தூத்துக்குடியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் 16வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் தொடங்கியுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கென நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 13 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட உள்ளது. பகலிரவாக நடைபெறும் இப்போட்டியில் ஏராளமானோ ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

Exit mobile version