தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெற உள்ளதால், அவருக்கு பதில் புதிய ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் கோபாலன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version