தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் முதலமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். மாலை 4 மணியளவில் கருங்குளம் ஊராட்சியில் வேளாண் பெருங்குடி மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், வைகுண்டநாதர் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருப்போருடன் உரையாடுகிறார். பின்னர் அடைக்காபுரம் ஊராட்சியில், விவசாயிகள் மற்றும் கருப்பட்டி வெல்லம் உற்பத்தியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். திருச்செந்தூர் தொகுதி வீரபாண்டியன் பட்டன கிராமத்தில் மாலை 6.45 மணியளவில் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின், இரவு 8.30 மணிக்கு தனியார் விடுதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமுதாய பெரியோர்களை சந்திக்கிறார்.

 

Exit mobile version