இந்த ஆண்டு கொய்யா மகசூல் பாதிப்பு: கொய்யா விவசாயிகள் கவலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பருவமழை குறைவால் போதிய தண்ணீர் இல்லாமல் கொய்யா மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேக்களூர் மற்றும் ராந்தம் பகுதிகளில் பல ஆண்டுகளாக கொய்யா பயிரிடப்பட்டு வருகிறது. கொய்யா சாகுபடியில் கடந்த ஆண்டு வரை குறைந்த செலவில் அதிக லாபம் கண்டுவந்த நிலையில், இந்த ஆண்டு பருவமழை குறைவால், போதிய தண்ணீர் இல்லாமல் கொய்யா மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கொய்யா சாகுபடியில் ஆண்டிற்கு செலவுகள் போக, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வந்த நிலையில் மழை குறைவால், செடிகள் வாடியுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version