இந்தப்பக்கம் பகுத்தறிவு பேச்சு, அந்தப்பக்கம் பூரண கும்ப மரியாதை ஏற்பு – குழப்பும் ஸ்டாலின்

பரமக்குடி அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பகுத்தறிவு பேசுபவர், பூரண கும்ப மரியாதையை  ஏற்றுக்கொண்ட செயல்  கூட்டத்தில் அனைவரையும் முணுமுணுக்கச் செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டதால் அப்பகுதியில் இருந்து குழந்தைகளையும், வயதானவர்களையும் வலுக்கட்டாயமாக வரவழைத்து நிரப்பப்பட்டது.

ஒருகட்டத்தில், ஸ்டாலினை காண்பதற்காக முன்வரிசையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை, திமுகவினர்  அங்கிருந்து எழுந்து போக செய்தது அனைவரையும் மனவருத்தம் கொள்ளச் செய்தது. பகுத்தறிவு குறித்து மேடையில் முழங்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கூட்டத்தில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது அனைவரையும் முணுமுணுக்க செய்தது.இடைத்தேர்தலையொட்டி நடத்தப்படும் கிராமசபை கூட்டம் என்கிற பெயரில் ஸ்டாலின் காமெடி தர்பார் நடத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version