திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் 2-வது நாளாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில், உலோக திருமேனி பாதுகாப்பகம் அமைந்துள்ளது. இங்கு திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 359 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதல் நாளான நேற்று 87 சிலைகளை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மற்றும் தொல்லியல் பிரிவினர், இரண்டாவது நாளாக இன்றும் எஞ்சியுள்ள சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version