திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், சொந்த தம்பிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களையே அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குடவாசல் அருகே, 18புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். முன்னாள் திமுக ஊராட்சி மன்றதலைவரான இவரது மகள் திவ்யா தற்போதைய ஊராட்சி மன்றதலைவராக உள்ளார்.

கல்யாணசுந்தரத்தின் தம்பி ராஜேந்திரன் உயிரிழந்த நிலையில், அவருக்கு பாத்தியப்பட்ட நிலங்கள், தோப்புகள் என சுமார் 5 கோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கல்யாணசுந்தரம் ஆக்கிரமித்துள்ளதாக, ராஜேந்திரனின் மனைவி உஷா புகார் தெரிவித்துள்ளார்.

நிலங்களில் தங்களை பயிர் செய்யவிடுவதில்லை எனவும், குத்தகைக்கு விடவும் அனுமதிப்பது இல்லை என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக வருவாய்துறை, காவல்துறை என புகார் அளித்தும், கல்யாணசுந்தரத்தின் மகள் திவ்யா அதனை திமுக நிர்வாகிகளைக் கொண்டு சரிக்கட்டி விடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியே வசித்து வரும் தன்னை மிரட்டி சொத்துகளை அபகரிக்க திட்டமிடுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

 

Exit mobile version