திருவண்ணாமலையில் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழையினால் ஏரி குளங்கள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர், வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பல நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சி நிலவுகிறது. இதனால், ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதுடன் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version