அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அக்னி ஸ்தலமாக போற்றப்படும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10ம் நாளான இன்று அதிகாலை 3 மணியளவில், கோயில் கருவறையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீபத்தைக் கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

Exit mobile version