"தொடர் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் "

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

செய்யாறு அடுத்த செய்யாற்றை வென்றான் கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. தொடர் மழை காரணமாக அங்குள்ள வீடுகள் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பழங்குடியின மக்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன், நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, பிரட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, எந்த உதவியையும் செய்யவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

Exit mobile version