திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் பஞ்சரத தேரினை புதுப்பிக்கும் பணி

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் பஞ்சரத தேரினை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் ஒன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற மகா தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 30ம்தேதி ராஜகோபுரத்தின் முன்பு திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகளை ஆரம்பிப்பதற்காக பந்தக்கால் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேரடி வீதியில் உள்ள விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர், முருகர் தேர் ஆகிய தேர்களில் உள்ள மேற்கூரைகளை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version