திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப மை விற்பனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப மை, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபம் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி மலை மீது ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் காட்சி அளித்தது. இந்த நிலையில் கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு ஆராதனை செய்யப்பட்டு, திலகமாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீப மை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஒரு தீப மை பாக்கெட் 10 ரூபாய்க்கு, கோயில் நிர்வாகத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version