தைவான் நாட்டிற்கு அனுப்பப்படும் திருவள்ளுவர் சிலை

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், தைவான் நாட்டிற்குத் திருவள்ளுவர் சிலையை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விஜயராகவன், நீதிபதி வள்ளிநாயகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வி.ஜி.சந்தோசத்தின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதற்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விருது தமக்கு வழங்கப்படுவது தமிழ்த் தொண்டாற்றத் தம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் சந்தோசம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version