பதட்டமான வாக்குச்சாவடிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் அருகே பதட்டமான வாக்குசாவடிகளை, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 166 பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதட்டமான 9 வாக்குச்சாவடிகளை
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்றும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வரும் புகார் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

Exit mobile version