விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் அலைமோதிய கூட்டம்

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், விடுமுறை நாளான இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பொழுதை கழித்து சென்றனர்.

 

 

 

Exit mobile version