நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடைக்கு திருமாவளவன் வரவேற்பு

தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தரமாக நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். காடுகளை, வன விலங்குகளை அளிக்காமல் திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தினால் வரவேற்பதாக தெரிவித்தார்.

ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு சந்திப்பால், இந்திய அரசியல் களம் சூடு பிடித்து உள்ளதாக கூறிய அவர், வலுவான கூட்டணி அமைவதை வரவேற்பதாகவும் கூறினார்.

 

Exit mobile version