திமுக கூட்ட மேடையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் ஆட்களே இல்லாத திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், வேட்பாளர் திருமாவளவனும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சம்பவம் நகைப்புக்குள்ளாகி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரைபாளையத்தில், திருமண மண்டபம் ஒன்றில், திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளரான விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவரை ஆதரித்து மாவட்ட செயலாளர் பேசிக்கொண்டிருந்த போது, மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன், செல்போன் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தார். இதனால், அங்கிருந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது ஒருபுறமிருக்க, கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன டம்ளர், டப்பாக்களில், தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது. அவைகளை, சாப்பிட்டுவிட்டு அப்படியே மண்டபம் முழுக்க வீசிச் சென்றனர்.

Exit mobile version