பெரியார், அம்பேத்கார் பாதுகாத்த சமூகநீதியை அழிக்க பாஜக சதி தீட்டுகிறது – திருமாவளவன்

தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் போராடி பாதுகாத்த சமூகநீதி கோட்பாட்டை அழிக்க, பா.ஜ.க. சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தியதன் மூலம், பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று கூறினார். இந்த திட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version