திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து கோவில்களின் வடிவமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version