மூன்றாம் அலை எந்த நேரத்திலும் தாக்கலாம்: எச்சரிக்கையூட்டும் ஆளுநர் தமிழிசை

குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என்றும் மூன்றாம் அலை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.எந்த நேரத்திலும் கொரோனா மூன்றாவது அலை தாக்கப்படலாம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து பொது நல மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு  கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தினார். 

Exit mobile version