நகை என நினைத்து அஸ்தி பெட்டியை திருடிய திருடன்

 

 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் டெனிஸ் 19 வயதான இவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.. இதனால் டெனிஸ் பெற்றோர் மகனின் அஸ்தியை அழகான பெட்டி ஒன்றில் வைத்து அதனை கரைப்பதற்காக சென்றுள்ளனர்.

பெற்றோர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது காரின் பின்புறம் வைத்திருந்த அஸ்தி பெட்டியை, காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்து பெற்றோர் எங்களது மகனின் அஸ்தி ஒரு அழகான பெட்டியில் வைத்திருந்ததை காணவில்லை என விளம்பரம் செய்துள்ளனர்.. இதனை அடுத்து அந்தத் திருடன் அஸ்தி பெட்டி இருக்கும் இடத்தைப் பற்றியும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க போனில் பெற்றோரிடம் கூறியுள்ளார்..

Exit mobile version