அவிநாசியில் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய திருடன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற போது, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் திருடன் சுவர் ஏறி தப்பி ஓடினான்.

அவிநாசி அடுத்த சின்னேரிபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி என்பவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர், பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால், அந்த திருடன் சுவர் ஏறி குதித்து தப்பி ஒடினான். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Exit mobile version