கர்நாடக தம்பதிகளை தாக்கி நகை, பணத்தை திருடி சென்ற திருடன் கைது

கர்நாடக தம்பதிகளை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற கொள்ளையனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா, தமிழக எல்லைப் பகுதியான இண்டளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரெட்டி என்பவர், தனது மனைவி ஜெயம்மாவுடன் கடந்த 21ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் முகவரி கேட்டு வந்துள்ளார். திடீரென வீட்டிற்குள் நுழைந்த அவர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் இருவரையும் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த 80 கிராம் தங்கம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், நேற்று மாலை குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Exit mobile version