இனி நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

“ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தால், தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

“ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தால் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்ற நிலை இனி இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version