ஆண்டு ஒன்றுக்கு 2000 மருத்துவர்கள் உருவாகுவார்கள் – மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பெருமிதம்

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கும் அளவிற்கு வரலாற்று சாதனையை தமிழக அரசு படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழக அரசின் சிறப்பான ஆட்சியின் காரணமாக உயர்க்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை என்றும், காவிரி உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் எனவும் கூறினார்.

Exit mobile version