சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை: ஏர் இந்தியா

கடும் நிதி நெருக்கடி காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 கடும் நிதி நெருக்கடி காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றவை என ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகனி,  தெரிவித்தார். ஏர் இந்தியா தனது சேவையை தொடர்ந்து வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்று கூறிய அவர், இந்த வதந்தி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்றுக் கூறினார். ஏர் இந்தியா பங்குகளை தனியார் மயமாக்குவது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியா தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.           

Exit mobile version