மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் தங்கமணி!!

விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ஏதுவாக, இந்தாண்டு மட்டும் 112 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சோளங்கபாளையத்தில் 2 ஏக்கர் பரப்பளவில், 13 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுபினர்கள், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அஇஅதிமுக ஆட்சியின் மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version