ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் பியூஸ் கோயல்

ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுகே இடமில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே துறையில் சில பணிகளை மட்டுமே தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீஹாரில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது, ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுகே இடமில்லை என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version