எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை : அமைச்சர் சரோஜா

எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கலில் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாய கண்காட்சி நடைபெற்றது.

3 நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் நிறைவு விழாவில் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் மானிய விலையில் கருவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை எனறும் தற்போது புதிய சத்துணவு பணியாளர்கள் தேர்வு இல்லை என்றும் கூறினார்.

 

 

Exit mobile version