அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலிவலம், தப்ளாம்புலியூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 519 பேருக்கு, அமைச்சர் காமராஜ் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் தான், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதனை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் கூறினார். செந்தில் பாலாஜி திமுகவில் சேருவது பற்றி தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.