அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை

அதிமுக ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் ஜி.எஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம், பொழுதுபோக்கு பூங்கா, பயணிகள் நிழற்குடை, தரைப்பாலம் ஆகியவற்றை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார். தொண்டர்கள் முழுமனதோடு உழைத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version