குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சரிவர மழை பெய்யாத காரணத்தால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய ஆரம்பித்தது. இருப்பினும் விடுமுறை தினங்களில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவிலேயே காணப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் குறைந்த அளவில் காணப்பட்டது.

இந்தநிலையில், குற்றாலத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் காலை முதல் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அருவிப் பகுதியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகளை வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளித்தனர்.

Exit mobile version