கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியல், பாதுகாப்பு இடைவெளியின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுமார் 500 பேர் குவிந்த நிலையில், 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் மீதமுள்ளவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாததால், தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version