மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு வரும் : கடம்பூர் ராஜூ நம்பிக்கை

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமான முடிவை எடுக்கும் என நம்புவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் இறச்சகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் நிவாரண நிதியை பெற மத்திய அரசுக்கு, தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறினார். விரைவில் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.

Exit mobile version