திமுகவில் நம்பிக்கை துரோகிகள் உள்ளனர் : கதிர் ஆனந்த்

திமுகவில் நம்பிக்கை துரோகிகள் இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய கதிர் ஆனந்த், திமுகவை வெற்றி பெறச் செய்ய பிரிவினைகளை ஓரங்கட்டி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எவ்வளவு பெரிய சக்திகளாக இருந்தாலும் கூடவே நம்பிக்கை துரோகிகளும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், குழி பறிக்கும் வல்லுநர்களும் இருப்பதாக சாடினார்.

Exit mobile version